August 20, 2018
தண்டோரா குழு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி டெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மலர்தூவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி,முன்னாள் துணை குடியரசு தலைவர் அமித் அன்சாரி,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.