August 18, 2018
தண்டோரா குழு
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தஐ.நா சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னன் காலமானார்.
கானாவின் குமசி என்ற இடத்தில் 1938 ம் ஆண்டு பிறந்தவர் கோபி அன்னன்.அவரது முழுப்பெயர் கோபி அட்டா அன்னன்.இவர் 1996ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலராக தேர்வு செய்யப்பட்டார்.அதன் பின் 2001 ல் மீண்டும் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
2001-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றகோபி அன்னன்அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர், சிரியாவில் அமைதி ஏற்படுத்துவதற்காக ஐ.நா.,வின் சிறப்பு தூதராக செயல்பட்டார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலகுறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். கோபி அன்னனுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.