• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

August 18, 2018 தண்டோரா குழு

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து கோவையில் உள்ள தடுப்பணைகள் முழுவதும் நிரம்பி தண்ணீர் அதிக வேகத்துடன் திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.கடந்த ஒரு மாத காலமாக அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் அதிவேகத்துடன் தண்ணீர் வருவதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர்.மேலும்,வனத்துறை மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் செல்லவோ அருவியில் குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கோவை குற்றாலம் அருவியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் சாடிவயல் சின்னாற்றில் பெருக்கெடுத்து நொய்யல் ஆறாக உருவெடுக்கிறது.நொய்யல் ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு உருவாகி கோவை ஆலந்துறை மாதம்பட்டி வழியாக சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு வருகிறது.இதனால் தடுப்பணையை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து வருவது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இதன் காரணமாக பேரூர் படித்துறை பாலம் மூழ்கி காணப்படுகிறது.

இதேபோல் கோவையில் உள்ள புட்டுவிக்கி உள்ளிட்ட தடுப்பு அணைகள் நிரம்பி வழிகின்றன.நொய்யலில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் ஆலாந்துறை,மாதம்பட்டி,சித்திரைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.அதில் நொய்யல் ஆற்றில் பொதுமக்கள் துணி துவைக்கவும் குளிக்கவும் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க