• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

August 17, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 324 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் மற்றும் மீனவர்கள் தங்களின் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவின் ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிரைமாத கர்ப்பிணியான சஜிதா ஜாபீல்(25)என்பவர் மழை வெள்ளத்தில் தவித்து வந்துள்ளார்.அவரை இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கேரளா முழுவதும் வெள்ளத்தால் மக்கள் துயரப்பட்டு வரும் நிலையில், தான் தாய்மை நிலையினை அடைந்திருப்பது மறக்கமுடியாத நிகழ்வாக கருதுவதாக சஜிதா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க