• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 3 பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

August 17, 2018 தண்டோரா குழு

கோவையில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்கியதில் 3 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாயின் மறைவையொட்டி தமிழகத்தில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது.இதற்கிடையில்,வாஜ்பாயின் மறைவையொட்டி கோவையில் இன்று காந்திபுரம்,கிராஸ்கட் சாலை,நஞ்சப்பா சாலை, 100 அடி சாலை,டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.சில இடங்களில் திறந்துள்ள கடைகளை அடைக்குமாறு பாஜகவினர் வற்புறுத்தி வருகின்றனர்.

இதனால்,நகரில் குறைந்த அளவிலான தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே கோவை பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளி சந்திப்பு,மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சந்திப்பு,ஆலந்துறை ஆகிய பகுதிகளில் சென்ற பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.இதில் பேருந்து கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.இந்த தாக்குதலில் பேருந்து டிக்கெட் பரிசோதகர் கைலாசம் என்பவருக்கு காயம் ஏற்பட்டு,சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார்,விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க