• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 765 மில்லி மீட்டர் மழையளவு பதிவு

August 16, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் சூழலில்,ஒரே நாளில் 765 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வரும் நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.கோவையில் திருச்சி சாலை,அவினாசி சாலை,காந்திபுரம், துடியலூர் உள்ளிட்ட மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலாக மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 765.80மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.அதிகபட்சமாக சின்கோனா பகுதியில் 260 மில்லி மீட்டர் மழையும்,வால்பாறை மற்றும் சின்னக்கல்லாறு பகுதிகளில் 186 மில்லி மீட்டர் மழையளவும் பதிவாகி உள்ளது.

இதனால் வால்பாறை,பொள்ளாச்சி வட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,கோவை மாநகரிலும் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு செல்வோர் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.மழை காரணமாக கோவை மாநகரில் வெள்ளூர்,போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழையின் காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மறுஅறிவிப்பு வரும் வரை கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க