• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்னிந்திய திருச்சபையின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

August 15, 2018 தண்டோரா குழு

தென்னிந்திய திருச்சபையின் கோவை மண்டலம் சார்பில்,சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

கோவையில் விசுவாசபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ நல்ல சமாரியன் ஆலயத்தில்,தென்னிந்திய திருச்சபையின் கோவை மண்டலம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை மண்டல பேராயர் தீமோத்தி ரவீந்தர்,கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி,கே.ஜி நிறுவனத்தின் பக்தவத்சலம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

சுதந்திரதின நாளை முன்னிட்டு இன்று முழுவதும் விசுவாசபுரம் பகுதியில் இந்த முகாம் நடைபெறுகிறது.இந்த முகாமில் சர்க்கரை அளவு,பொது மருத்துவம்,கண் மற்றும் பல் தொடர்பான பரிசோதனைகளையும் ஆலோசனைகளையும் இலவசமாக அளிக்கின்றனர்.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க