• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொங்கு மக்கள் முன்னணியினர் ஆட்சியரிடம் மனு

August 13, 2018 தண்டோரா குழு

சாதி வன்முறையை தூண்டும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் பேசுவதாகவும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொங்கு மக்கள் முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளரான திருமா மணி என்பவர் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக கொங்கு இன பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெண்களை தவறாக பேசும் இந்த நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கொங்கு மக்கள் முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.மேலும்,இது போன்ற பேச்சுக்களால் சமூக ரீதியான பிரச்சனைகள் வருவதாகவும்,எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க