• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி காலமானார்

August 13, 2018 தண்டோரா குழு

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் இன்று காலமானார்.

நாட்டில் அதிக காலம் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியவர் என்ற பெருமையை பெற்றவர் சோம்நாத் சட்டர்ஜி(90) ஆவார்.மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியை சேர்ந்தவரான இவர் கடந்த 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது,லோக்சபா சபாநாயகராக இருந்தார். அவையை நடத்துவதில் சிறந்தவர் என பெயர் பெற்றவர் சோம்நாத் சட்டர்ஜி.

இதற்கிடையில்,உடல்நலக்குறைவால் சோம்நாத் சட்டர்ஜி கடந்த ஆக.10-ம் தேதி கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில்,இன்று காலை 8.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க