குழந்தை அழுததால் தன்னையும் தனது குடும்பத்தையும் விமானத்திலிருந்து இறக்கிவிட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீது பாதிக்கப்பட்ட இந்திய அதிகாரி புகார் அளித்துள்ளார்.
இந்திய போக்குவரத்துத் துறை அமைச்சரக அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த மாதம் 23ம் தேதி லண்டனில் இருந்து பெர்லினுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார்.
இந்நிலையில் விமானம் புறப்பட்ட போது,அவர்களின் 3 வயது குழந்தை இருக்கையில் சரியாக அமர முடியாமல் அழத் தொடங்கியது.உடனே விமான ஊழியர் ஒருவர்,குழந்தையை மிரட்டி இருக்கையில் உட்காரும்படி கூறியுள்ளார்.இதனால் குழந்தை மேலும் அழுததால் அனைவரையும் விமானத்திலிருந்து இறக்கிவிட்டனர்.
மேலும்,தங்களுக்குப் பின்னால் இருந்த மற்றொரு இந்தியக் குடும்பம் குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்து சமதானப்படுத்த முயன்றதாக அவர்களையும் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிட்டனர்.
இந்நிலையில்,பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி,இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுடம் புகார் மனு அளித்துள்ளார்.அதில்,விமான ஊழியர் தங்களிடம் மோசமாக நடந்துக் கொண்டதாகவும்,இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் திட்டியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தாங்கள் ஒருபோதும் இனபாகுபாட்டை ஊக்குவித்ததில்லை என்றும்,இந்த பிரச்சனை சம்பந்தமாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !