• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தை அழுததால் தனது குடும்பத்தை விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது புகார்

August 10, 2018 தண்டோரா குழு

குழந்தை அழுததால் தன்னையும் தனது குடும்பத்தையும் விமானத்திலிருந்து இறக்கிவிட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீது பாதிக்கப்பட்ட இந்திய அதிகாரி புகார் அளித்துள்ளார்.

இந்திய போக்குவரத்துத் துறை அமைச்சரக அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த மாதம் 23ம் தேதி லண்டனில் இருந்து பெர்லினுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார்.
இந்நிலையில் விமானம் புறப்பட்ட போது,அவர்களின் 3 வயது குழந்தை இருக்கையில் சரியாக அமர முடியாமல் அழத் தொடங்கியது.உடனே விமான ஊழியர் ஒருவர்,குழந்தையை மிரட்டி இருக்கையில் உட்காரும்படி கூறியுள்ளார்.இதனால் குழந்தை மேலும் அழுததால் அனைவரையும் விமானத்திலிருந்து இறக்கிவிட்டனர்.

மேலும்,தங்களுக்குப் பின்னால் இருந்த மற்றொரு இந்தியக் குடும்பம் குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்து சமதானப்படுத்த முயன்றதாக அவர்களையும் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிட்டனர்.

இந்நிலையில்,பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி,இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுடம் புகார் மனு அளித்துள்ளார்.அதில்,விமான ஊழியர் தங்களிடம் மோசமாக நடந்துக் கொண்டதாகவும்,இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் திட்டியதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தாங்கள் ஒருபோதும் இனபாகுபாட்டை ஊக்குவித்ததில்லை என்றும்,இந்த பிரச்சனை சம்பந்தமாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் படிக்க