• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாய்லாந்தில் புத்த துறவிக்கு 114 ஆண்டுகள் சிறைத்தண்டனை

August 10, 2018 தண்டோரா குழு

தாய்லாந்து நாட்டில் புத்த துறவிக்கு 114 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாங்காக் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புத்த துறவி வைராபோன் சுக்போன்(39).சில ஆண்டுகளுக்கு முன், உலகின் மிகப் பெரிய புத்தர் சிலை அமைப்பதாக கூறி,பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக பெற்று மோசடி செய்ததாக அவர் மீது புகார்கள் பதிவாகின.

மேலும்,சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து போலீஸாரிடம் ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கானது, பாங்காக் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்,அவருக்கு 114 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும்,இவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க