• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளா கனமழை பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு

August 10, 2018 தண்டோரா குழு

கேரளாவில் கனமழை,வெள்ளம்,நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

கேரளா மற்றும் கா்நாடகா மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது.கடந்த சில தினங்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

கேரளாவின் இடுக்கி,கோழிக்கோடு,வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கொல்லம் ஆகிய பகுதிகளில்கனமழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.மேலும்,உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கேரளாவில் பெய்யும் கனமழை பாதிப்பில் இருந்து மக்களை காக்க ராணுவம் மற்றும் கப்பற்படை உதவியை கேரள அரசு நாடியுள்ளது.3 தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும், கடலோர காவல்படை குழுவினரும் ஏற்கனவே கேரளா வந்தடைந்தனர்.மேலும்,6 கூடுதல் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்ப மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது.

மேலும் படிக்க