• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல இரண்டாவது நாளாக தடை

August 10, 2018 தண்டோரா குழு

கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டவுள்ளது.மேலும் பலத்த காற்றும் வீசுவதால் மரங்கள் முறிந்து விழக்கூடும் சூழலும் உருவாகி உள்ளது.இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் செல்ல தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த ஒரு மாதங்களாக கோவை குற்றாலம் மூடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க