• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் அறிவித்தவுடன் வேட்பாளர் குறித்து அறிவிப்போம் – டி.டி.வி. தினகரன்

August 7, 2018

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் அறிவித்தவுடன் வேட்பாளர் குறித்து அறிவிப்போம் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

“திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அதிலிருந்து வெளியேறினால்,அவர்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து சிந்திப்போம். திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து வரும் தகவல்கள் தனக்கு கவலை அளிப்பதாகவும், அவர் முழு உடல் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் 8 வழிச்சாலைத் திட்டம் தேவையற்றது. இயற்கை வளங்களை அழிக்கும் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து போராடும்”. என்று கூறினார்

மேலும் படிக்க