• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கரும்புக்கடையில் இணைப்பு சாலை அமைக்க எதிர்ப்பு – மாவட்ட ஆட்சியரிடம் மனு

August 6, 2018 தண்டோரா குழு

கோவை கரும்புக்கடை பகுதியில் இணைப்பு சாலை அமைப்பதால் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக, அத்திட்டத்தை கைவிட கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரும்புக்கடை முதல் நஞ்சுண்டாபுரம் பகுதி வரை 6 கிலோ மீட்டர் தூரம் இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைப்பதால் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுமெனவும், அத்திட்டத்தை கைவிட கோரியும் சாரமேடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், அங்கு வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கிய நிலையில் ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முயற்சிப்பதாகவும், 300 வீடுகள் பாதிக்கப்படுமெனவும் எனவும் கூறிய அப்பகுதி மக்கள், ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்தினாலே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியுமென தெரிவித்தனர். இல்லையெனில் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை தலைமை செயலகத்தில் ஒப்படைப்போம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க