• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பொதுமக்கள் விருப்பப்படி அரசு மதுப்பானக்கடை திறக்க அனைத்து கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

August 6, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் பொதுமக்கள் விருப்பப்படி அரசு மதுப்பானக்கடை திறக்க வேண்டுமென, அனைத்து கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதிமுக, திமுக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில், அப்பகுதியில் ஒரு அரசு மதுபானக்கடை திறக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கள்ள மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அரசு மதுபானக்கடை திறக்க வேண்டுமென பொதுமக்கள் பலரும் விருப்பப்படுவதாகவும், இதனால் அதிக விலை கொடுத்து மது வாங்குவதாகவும், பல கிலோ மீட்டர் மதுக்கடை தேடி செல்வதும் தவிர்க்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மதுபானக்கடைக்கு எதிராக கருமத்தம்பட்டி பகுதி மக்கள் போராடி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் மதுக்கடை திறக்க கோரி மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க