• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பொதுமக்கள் விருப்பப்படி அரசு மதுப்பானக்கடை திறக்க அனைத்து கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

August 6, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் பொதுமக்கள் விருப்பப்படி அரசு மதுப்பானக்கடை திறக்க வேண்டுமென, அனைத்து கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதிமுக, திமுக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில், அப்பகுதியில் ஒரு அரசு மதுபானக்கடை திறக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கள்ள மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அரசு மதுபானக்கடை திறக்க வேண்டுமென பொதுமக்கள் பலரும் விருப்பப்படுவதாகவும், இதனால் அதிக விலை கொடுத்து மது வாங்குவதாகவும், பல கிலோ மீட்டர் மதுக்கடை தேடி செல்வதும் தவிர்க்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மதுபானக்கடைக்கு எதிராக கருமத்தம்பட்டி பகுதி மக்கள் போராடி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் மதுக்கடை திறக்க கோரி மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க