• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கணுவாயில் முகமூடி அணிந்து மளிகைக் கடையில் கொள்ளை

August 4, 2018 தண்டோரா குழு

கோவை கணுவாயிலுள்ள டி எஸ் மளிகை கடையில் முகமூடி அணிந்து வந்து திருடிய கொள்ளையனை காவல்துறை தேடி வருகின்றனர்.

கணுவாய் வி.எம்.டி நகரில் திருநேல்வேலியைச்சேர்ந்த தங்கராஜா என்பவருக்கு சொந்தமான டி.எஸ் அரிசி மற்றும் மளிகை கடை உள்ளது.இந்நிலையில் நேற்றிரவு இரண்டு மணிக்கு மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கிய திருடன் கள்ளப்பெட்டியில் இருந்த 25 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்று உள்ளான்.

மேற்கூரையில் இருந்த இரும்பு செயினின் உதவியால் உள்ளே புகுந்தவன் முகத்தை மூடிக்கொண்டு தலைக்கு தொப்பி அணிந்து அடையாளம் தெரியாத வண்ணம் வந்து திருடிச்செல்லும் காட்சிகள் சி.சி டிவியில் பதிவாகியுள்ளன.

காலையில் கடை திறக்க வந்த தங்கராஜா கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு பணம் 25 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து வடள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க