• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம்

August 4, 2018 தண்டோரா குழு

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தகில் ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பணியாற்றி வருகிறார்.அவருக்கு,உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்குமாறு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த இந்திரா பானார்ஜி,உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி உயர்வு பெற்று செல்கிறார். இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த விஜயா கமலேஷ் தஹில் ரமணி,தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட இருக்கிறார்.

இவர் கடந்த 1982ம் ஆண்டு மும்பை மற்றும் கோவாவில் வழங்கறிஞராகவும்,2001-ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார்.மேலும்,சென்னை உயர் நீதிமன்றத்தின் 2-வது பெண் தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில்ரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க