• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதிக்கு கடிதம் எழுதிய சிறுமியை சந்தித்த ஸ்டாலின்

August 3, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சிறுமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.தற்போது அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்டம்,வேப்பம்பட்டைச் சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி மிக்கலே மிராக்ளின் என்பவர் கருணாநிதி உடல்நலம் பெறவேண்டி சமீபத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில்,

“எனக்கு கருணாநிதி தாத்தா ரொம்ப பிடிக்கும்.அவர் மேல எனக்கு அன்பு ரொம்ப அதிகம். உங்களுக்கு உடம்பு சரியில்லை என கேள்விப்பட்டவுடன் நான் அழுதேன்.உங்களுக்காக நான் இரவு மற்றும் காலையில் பிராத்தனை பண்னினேன்.தற்போது நீங்கள் நலமாக இருப்பதாக எனது தாய் என்னிடம் கூறினார்,எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.இப்போது நான் பள்ளிகூடத்திற்கு சந்தோசமாக செல்றேன்” என எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில்,சிறுமி மிச்செல் மிராக்லின் தனது தாய் ரோஸ்லினுடன் காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.அவரிடம்,நான் தாத்தாவை பார்க்க முடியுமா? என்று சிறுமி கேட்டார். அதற்கு மு.க.ஸ்டாலின்,”தாத்தா வீடு திரும்பியதும்,கண்டிப்பாக உன்னை அழைக்கிறேன்.நீ தாத்தாவிடம் பேசு” என்று கூறியதாக மிச்செல் மிராக்லினின் தாய் ரோஸ்லின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க