• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாய்ப்பாலை தானாமாக அளித்த தாய்மார்கள்

August 2, 2018 தண்டோரா குழு

தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பிற தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கினர்.

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தாய்ப்பால் தானம் வழங்கப்பட்டது.

கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்கள் சிலருக்கு பால் குறைந்த அளவிலேயே வருவதால்,அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த குழந்தைகளுக்கு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தாய்மார்கள் தாய்ப்பாலை நேரடியாக வழங்கினர்.

இதனால் எந்த குழந்தைகளும் தாய்ப்பால் குடிக்காமல் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த தாய்ப்பால் தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.மேலும் தங்களுடைய குழந்தைகள் அல்லாத மற்ற குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் வழங்கிய தாய்மார்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க