• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி!

July 31, 2018 தண்டோரா குழு

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருணாநிதி,அவரது மனைவிகள், ஸ்டாலின்,கனிமொழி,மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்கள் சொத்து மதிப்பு என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஜூலை 27ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து,மாநில மற்றும் தேசிய அளவில் இருந்து அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு முக்கிய பிரபலங்களும் காவிரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

இதற்கிடையில்,கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும்,மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பலரும் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற்று எழுந்து வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜுதனது பேஸ்புக் பக்கத்தில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி மீது தமிழர்கள் மிகுந்த பரிதாபப்படுகிறார்கள்.ஆனால் கருணாநிதி அரசியலுக்கு வரும் முன் அவரது சொத்து மதிப்பு என்ன? இப்போது கருணாநிதி,அவரது மனைவிகள்,ஸ்டாலின்,கனிமொழி,மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்கள் சொத்து மதிப்பு என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,காமராஜர் உயிரிழந்த போது அவரிடம் எதுவுமே இல்லை.ஆனால் தற்போது இது தலைகீழாக உள்ளது என கருணாநிதி மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

மேலும் படிக்க