• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனைகள் வேலைநிறுத்த போராட்டம்

July 28, 2018 தண்டோரா குழு

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,கோவை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் மருத்துவமனைகள் 12 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் 12 மணி நேர வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை நகரில் 400க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும்,கோவை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் சிறிய,பெரிய மருத்துவமனைகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இம்மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.
உள்நோயாளிகளுக்கான சிகிச்சை,அவசர சிகிச்சை,அவசர அறுவை சிகிச்சை,பிரசவம் போன்றவை மட்டுமே பார்க்கப்படுகின்றன.இந்திய மருத்துவ சங்கத்தை கலைத்து மருத்துவர்கள் அல்லாதவர்களை கொண்டு தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு அமைக்க முயல்வதை கைவிட வேண்டும் எனவும்,இப்போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க