• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனைகள் வேலைநிறுத்த போராட்டம்

July 28, 2018 தண்டோரா குழு

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,கோவை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் மருத்துவமனைகள் 12 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் 12 மணி நேர வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை நகரில் 400க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும்,கோவை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் சிறிய,பெரிய மருத்துவமனைகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இம்மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.
உள்நோயாளிகளுக்கான சிகிச்சை,அவசர சிகிச்சை,அவசர அறுவை சிகிச்சை,பிரசவம் போன்றவை மட்டுமே பார்க்கப்படுகின்றன.இந்திய மருத்துவ சங்கத்தை கலைத்து மருத்துவர்கள் அல்லாதவர்களை கொண்டு தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு அமைக்க முயல்வதை கைவிட வேண்டும் எனவும்,இப்போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க