• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்மனுக்கு இரண்டு லட்சம் ரூபாயில் அலங்காரம் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

July 28, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு இரண்டு லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.இந்த தினத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.இந்நிலையில் கோவையை அடுத்த சுந்தராபுரம் பகுதியில் உள்ள மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது .150 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்

இந்நிலையில்,ரூ 2ஆயிரம்,ரூ.500,ரூ.100 நோட்டுக்களை கொண்டு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.மொத்தம் 2 லட்ச ரூபாய்க்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த மாரியம்மனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து வழிபட்டு சென்றனர்.

மேலும் படிக்க