• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவிலுக்குள் நுழைந்து பெண்ணை கைது செய்த காவல்துறை

July 27, 2018 தண்டோரா குழு

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குள் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீபிரியா என்ற பெண்ணை திடீரென காவல்துறையினர் கோவிலுக்குள் நுழைந்து கைது செய்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் ஸ்ரீனிவாசன்(45).இவரது மனைவி ஸ்ரீபிரியா (42).மகேஷ் ஸ்ரீனிவாசன் மனைவியின் பெயரில் உள்ள நிறுவனத்தின் மூலம் பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு குடும்பத்தை விட்டுவிட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத காரணத்தால் இவரது குடும்பத்திற்கு அடிக்கடி மிரட்டல்களும் காவல் துறையினரால் கைது நடவடிக்கைகளும் நடப்பதாக கூறப்படுகிறது.கடந்த ஜூன் மாதம் முத்து கிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஸ்ரீபிரியாவை கைது செய்தனர்.

பின்னர் விசாரணை செய்து விட்டு விட்டதாகவும்,மீண்டும் போலீசார் கைது நடவடிக்கைக்கு தயாராவதை அறிந்து ஸ்ரீபிரியா,சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கியுள்ளார். வழக்கில் விசாரணை இறுதியில் ஸ்ரீபிரியாவுக்கு எதிரான வழக்கை போலீசார் முடித்துக் கொண்டதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில்,பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற ஸ்ரீப்ரியாவையும்,அவரது ஓட்டுநர் குமாரரையும் காவல்துறையினர் கோவிலுக்குள் நுழைந்து கைது செய்துள்ளனர்.கோவிலுக்குள் இருந்த பெண்ணை திடீரென போலீசார் கைது செய்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையில்,நீதிமன்ற உத்தரவை மீறி சிறை வைத்துள்ள தனது தாயாரை விடுவிக்கக்கோரியும், இதனால் மனவளர்ச்சிக் குன்றிய சகோதரனும் தானும் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக கூறி ஸ்ரீபிரியாவின் இரண்டாவது மகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.ஸ்ரீபிரியா கைது செய்யப்படவில்லை என்றும்,விசாரணைக்கு மட்டுமே அழைத்து வரப்பட்டதாகவும்,பின்பு விடுவிக்கப்பட்டதாக ஸ்ரீபிரியாவை கோவிலிலிருந்து அழைத்து சென்ற மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க