• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எனது நண்பர் கலைஞர் உடல்நலம் பெற்று நூற்றாண்டு விழா காணவேண்டும் – ராமதாஸ்

July 27, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாகவே,உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறார். இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,வயது மூப்பு காரணமாக உடல் நலிவுற்று காணப்படுகிறது.யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரம் சென்று, கருணாநிதி நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திமுக தலைவரும்,எனது ஆருயிர் நண்பருமான கருணாநிதியின் உடல்நிலை,வயது முதுமை காரணமாக சற்று நலிவடைந்திருப்பதாகவும்,சிறுநீரகக் குழாயில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக கருணாநிதிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.

தமிழக அரசியலில் முறியடிக்க முடியாத பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் கருணாநிதி ஆவார்.திமுகவின் தலைவராக கருணாநிதி பதவியேற்றதன் 50 ஆவது ஆண்டு வியாழக்கிழமை தொடங்கிய நிலையில்,அவரது உடல்நிலை பாதிப்பு குறித்த தகவலும் வந்திருப்பது நம்மை பாதித்திருக்கிறது.கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு அவரை காவேரி மருத்துவமனையிலும்,கோபாலபுரம் இல்லத்திலும் நேரில் சென்று சந்தித்தேன்.

கோபாலபுரம் இல்லத்தில் என்னை கருணாநிதி மிகச்சரியாக அடையாளம் கண்டு கொண்டார். அதனால் அவர் மிக விரைவில் உடல் நலம் தேறி மீண்டும் மக்கள் பணியாற்ற வருவார் என நானும் மற்றவர்களும் எதிர்பார்த்திருந்தோம்.ஆனால்,அதற்கு மாறாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,காய்ச்சலில் அவதிப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது.

கருணாநிதிக்கு அவரது இல்லத்திலேயே தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில்,அவர் முழுமையான உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறேன்.அவர் நூற்றாண்டு விழா காண வேண்டும்; மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க