• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி கம்பீர குரலில் மீண்டும் பேச வேண்டும் – விஜயகாந்த்

July 27, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி கம்பீர குரலில் மீண்டும் பேச வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாகவே,உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறார்.
இந்நிலையில் அவருக்கு வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரம் சென்று,கருணாநிதி குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கலைஞர் கருணாநிதி விரைவில் உடல் நலம்பெற்று,மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேச வேண்டும்.தமிழகத்தில் மீண்டும் அரசியல் பணிகள் செய்ய,நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க தான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க