• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹர்திக் படேலுக்கு 2 ஆண்டு சிறை !

July 25, 2018 தண்டோரா குழு

குஜராத்தில் பட்டேல் சமுதாயத் தலைவர் ஹர்திக் படேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் படேல் இனத்தவருக்கு கல்வி,வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு கோரி கடந்த 2015-ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.பதிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் படேல் இனத்தினர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

மேசனா மாவட்டம் விஸ்நகரில் ஜூலை 23,2015ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.அப்போது ஏற்பட்ட வன்முறையில் பல சொத்துக்கள் சேதபடுத்தப்பட்டன.அப்போது,பிஜேபி எம்.எல்.ஏ. ரிஷிகேஷ் படேலின் அலுவலகத்தை அடித்து நொறுக்கப்பட்டது.

இதையடுத்து,பதிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது.இந்நிலையில்,இந்த வழக்கில் விஸ்நகர் நகரம் அமர்வு நீதிமன்ற நீதிபதி அகர்வால் இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில்,ஹர்திக் படேல் மற்றும் அவருடைய இரண்டு உதவியாளர்கள்,லால்ஜி படேல் மற்றும் ஏ.கே. படேல் ஆகியோருக்கு தலா 2 வருட சிறைத்தண்டனையும்,மேலும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் படிக்க