• Download mobile app
04 Aug 2026, TuesdayEdition - 3828
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல்

July 25, 2018 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் மின்சாதன பொருட்களில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.34.10 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொழும்புவிலிருந்து கோவைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.அப்போது,சந்தேகத்தின் பேரில் பயணிகள் இருவரின் உடமையை சோதித்த போது,அவர்கள் எடுத்து வந்த iron box,Sony TV ஆகிய பொருட்களில் வட்டம் மற்றும் சதுர வடிவில் மறைத்து எடுத்து வரபட்ட 1100 கிராம் எடைக் கொண்ட 20 தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தங்க கட்டிகளை எடுத்து வந்த பயணிகளான கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முஹம்மது அலீப் (28),சென்னை தண்டியார்பேட்டையை சேர்ந்த அன்சாரி (38) ஆகிய இருவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தங்கம் மறைத்து எடுத்து வந்த iron box, TV ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும்,கைது செய்வதற்கான வரம்பு இல்லாததால் இருவரும் கைது செய்ய வாய்ப்பில்லை எனவும்,அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க