• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல்

July 25, 2018 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் மின்சாதன பொருட்களில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.34.10 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொழும்புவிலிருந்து கோவைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.அப்போது,சந்தேகத்தின் பேரில் பயணிகள் இருவரின் உடமையை சோதித்த போது,அவர்கள் எடுத்து வந்த iron box,Sony TV ஆகிய பொருட்களில் வட்டம் மற்றும் சதுர வடிவில் மறைத்து எடுத்து வரபட்ட 1100 கிராம் எடைக் கொண்ட 20 தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தங்க கட்டிகளை எடுத்து வந்த பயணிகளான கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முஹம்மது அலீப் (28),சென்னை தண்டியார்பேட்டையை சேர்ந்த அன்சாரி (38) ஆகிய இருவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தங்கம் மறைத்து எடுத்து வந்த iron box, TV ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும்,கைது செய்வதற்கான வரம்பு இல்லாததால் இருவரும் கைது செய்ய வாய்ப்பில்லை எனவும்,அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க