• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவிற்கு கடத்தவிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

July 25, 2018 தண்டோரா குழு

பெங்களூரிலிருந்து கேரளாவிற்கு விரோதமாக கடத்த முயன்ற புகையிலை பொருட்களை தமிழக-கேரள எல்லையான கோவை வாளையாறு சோதனை சாவடியில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை வாளையாறு கந்தேகவுண்டன் சோதனை சாவடியில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போது,கேரளா நோக்கி செல்ல இருந்த காரில் மூட்டைகள் இருந்ததை கண்டு சந்தேகமடைந்தனர்.

இதனையடுத்து விசாரித்ததில்,மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.உடனே,கோவை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சோதனை சாவடி காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,காரில் வைக்கப்பட்டிருந்த 10 மூட்டைகளில் இருந்த சுமார் 70ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சுமார் 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும்,புகையிலை பொருட்களை கொண்டு சென்ற கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த விபின்,ரியாஸ் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் தொடர்ச்சியாக இருவரும் பெங்களூரிலிருந்து கோவை வழியாக கேரளாவிற்கு குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு சென்றது தெரிய வந்ததால் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக,கே.ஜி.சாவடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க