• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் திடீரென தீப்பிடித்த லாரி

July 23, 2018 தண்டோரா குழு

கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை புதுப்பிப்பது தொடர்பான சோதனைக்காக லாரியை கொண்டு சென்ற போது திடீரென லாரியின் முன்பகுதி தீப்பிடித்து எறிந்தது.

கோவையை அடுத்த துடியலூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்,லாரியை புதுப்பிப்பது தொடர்பான சோதனைக்காக இன்று ஒரு லாரி வெளியே நின்று கொண்டு இருந்தது . அப்போது திடீரென லாரியின் முன் பகுதியில் தீப்பிடித்தது.லாரியின் ஓட்டுநர் உடனடியாக வண்டியை விட்டு இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பிறகு மளமளவென பரவிய தீயினால் லாரியின் முன்பகுதி முற்றிலும் எரிந்தது.உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.லாரி தீப்பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.லாரி தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க