• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திடீரென தீப்பிடித்த லாரி

July 23, 2018 தண்டோரா குழு

கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை புதுப்பிப்பது தொடர்பான சோதனைக்காக லாரியை கொண்டு சென்ற போது திடீரென லாரியின் முன்பகுதி தீப்பிடித்து எறிந்தது.

கோவையை அடுத்த துடியலூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்,லாரியை புதுப்பிப்பது தொடர்பான சோதனைக்காக இன்று ஒரு லாரி வெளியே நின்று கொண்டு இருந்தது . அப்போது திடீரென லாரியின் முன் பகுதியில் தீப்பிடித்தது.லாரியின் ஓட்டுநர் உடனடியாக வண்டியை விட்டு இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பிறகு மளமளவென பரவிய தீயினால் லாரியின் முன்பகுதி முற்றிலும் எரிந்தது.உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.லாரி தீப்பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.லாரி தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க