• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு – பிரகாஷ் ஜவடேகர்

July 19, 2018 தண்டோரா குழு

நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதற்கிடையில்,நீட் தேர்வு தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

“நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.ஏனெனில், தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்களே இதற்கு காரணம்,இனி அந்தந்த மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்படும்.நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களுக்கு மாணவர்கள் செல்ல தேவை இருக்காது” எனக் கூறினார்.

மேலும் படிக்க