• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு – பிரகாஷ் ஜவடேகர்

July 19, 2018 தண்டோரா குழு

நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதற்கிடையில்,நீட் தேர்வு தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

“நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.ஏனெனில், தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்களே இதற்கு காரணம்,இனி அந்தந்த மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்படும்.நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களுக்கு மாணவர்கள் செல்ல தேவை இருக்காது” எனக் கூறினார்.

மேலும் படிக்க