• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

July 18, 2018 தண்டோரா குழு

கோவையில் பயணிகள் பாதுகாப்பு,வருவாய் பாதிப்பு ஏற்படுத்தும் நடத்துனர் இல்லா பேருந்து இயக்கத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் ஓய்வுப்பெற்ற பணியாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

240 நாட்கள் பணி முடித்த அலுவலக பணியாளர்கள்,தொழில்நுட்ப பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவது போல்,ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தேவையான உதிரி பாகங்கள்,போதுமான தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்,விலைவாசி உயர்விற்கு ஏற்ப அகவிலைப்படி ஓய்வூதியம் இணைத்து,அதற்கு உண்டான நிலுவைத்தொகையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் ஓய்வுப்பெற்ற பணியாளர்கள் கோவை சிவானந்த காலனி பவுர் ஹவுஸ் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் கோவை,ஈரோடு,திருப்பூர் ஆகிய மண்டலங்களின் பொறுப்பாளர்கள்,தொழிலாளர்கள்,ஓய்வூதியதாரர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் படிக்க