• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

July 17, 2018 தண்டோரா குழு

ஆறுமுகத்தைக் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆறாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை அடுத்த நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாடியில் இருந்த விழுந்து மாணவி லோகேஷ்வரி உயிரிழந்தார். இந்த வழக்கில் போலி பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், ஆறுமுகத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி ஆலந்துறை காவல்துறையினர் கோவை 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகத்தைக் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க