• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யுஜிசிக்கு பதிலாக புதிய அமைப்பை ஏற்படுத்தக்கூடாது என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

July 14, 2018 தண்டோரா குழு

பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு,உயர்கல்வி ஆணையம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து,பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,

பல்கலைக்கழக மானியக் குழு,ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிதி சார்ந்த அதிகாரங்களுடன் நன்றாக இயங்கி வருவதால்,அதைக் கலைத்துவிட்டு,அதற்குப் பதிலாக ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை மட்டுமே கொண்ட இந்திய உயர்கல்வி ஆணையத்தை ஏற்படுத்த வேண்டியதில்லை.தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.தற்போதைய யுஜிசி அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.பல்வேறு திறன்களை மேம்படுத்திடும் யுஜிசி,நிதி ஒதுக்கீடு செய்தும் வருகிறது.கடந்த 1956ஆம் ஆண்டு முதல் நேர்மையாக செய்லபட்டு வருகிறது யுஜிசி.அதிகாரம் மாற்றப்பட்டால் 100% நிதியுதவி குறைந்திடும் வாய்ப்பு ஏற்படலாம்.மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீடு 60:40 என குறையும் நிலை ஏற்படலாம்.

மேலும்,மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் தமிழகத்திற்கு தகுதி அடிப்படையில் நிதி ஒதுக்குவது அவ்வளவு சாதகமாக இல்லை என்ற அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது,உயர் கல்வி ஆணைய மசோதா குறித்து தமிழக அரசுக்கு வலுவான கவலைகள் எழுந்துள்ளன.இது போன்ற காரணங்களால்,பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் தொடர்பான வரைவு மசோதாவை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதாகவும்,தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழு என்ற நிறுவனமே தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க