• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் கைது

July 14, 2018 தண்டோரா குழு

குடிநீர் இணைப்பு வசதிகளை செய்யவுள்ள தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி குடிநீர் குழாய்க்கு அஞ்சலி செலுத்திய மாதர் சங்கத்தினர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகரத்திற்கான குடிநீர் விநியோகத்தை 26 ஆண்டுகளுக்கு சூயஸ் என்கிற பன்னாட்டு நிறுவனம் கோவை மாநகராட்சியிடம் ஒப்பந்தத்தை போட்டுள்ளது.இதன்காரணமாக பொது குழாய்கள் அகற்றப்படும்,குடிநீர் வணிகமயமக்கப்படும் என்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாய்க்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தும்,தேங்காய் பழம் வைத்து பூஜை செய்தும் அஞ்சலி செலுத்தினர்.மேலும் குடிநீர் குழாயை சுற்றி ஓப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி,உள்ளிட்ட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க