• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மருந்தக உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி சிபிஐ அதிகாரிகள் கைது!

July 13, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சி.பி.ஐ அதிகாரிகள் எனக் கூறி மருந்தக உரிமையாளாரிடம் 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக முன்னாள் காவலர் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சத்யா என்பவர் மருந்துக்கடை நடத்தி வருக்கிறார். இந்நிலையில்,அவரது கடைக்கு நேற்று மாலை சி.பி.ஐ அதிகாரிகள் என கூறிக்கொண்டு 7 பேர் சென்றுள்ளனர்.அப்போது,முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக புகார்கள் வந்திருப்பதால் சத்யாவை கைது செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.மேலும்,கைது செய்யாமல் இருக்க 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து,வீட்டில் இருந்தவர்களை தனித்தனி அறைகளில் அடைத்ததுடன்,ஏ.டி.எம் கார்டு மூலம் 40 ஆயிரம் பணத்தையும் எடுத்துள்ளனர்.இந்நிலையில்,இது குறித்து சத்யாவின் உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர்.சத்யாவின் வீட்டிற்கு கருமத்தம்பட்டி காவல் துறையினர் சென்றனர். அப்போது,அங்கிருந்தவர்களில் மூன்று பேர் தப்பி ஓடினர்.பெருமாள்,மதுரை வீரன்,மகேஷ்வரன், இளையராஜா ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் சிபிஐ அதிகாரிகள் அல்ல என்பதும் மிரட்டி பணம் பறிக்க வந்த கும்பல் என்பதும் தெரியவந்தது.இதில்,கைது செய்யப்பட்டவர்களில் பெருமாள் என்பவர் காவல்துறையில் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் அவர் பணியில் இருக்கும் டி.எஸ்.பி ஒருவருடன் அடிக்கடி பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது.இதையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க