• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி பலி

July 13, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்துள்ளார்.

கோவை அடுத்த நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிபிஏ படித்து வருபவர் லோகேஸ்வரி.இவர் வியாழனன்று கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது பயிற்சியாளர் ஆறுமுகம் மாணவியை 2வது மாடியில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.இதில் சன்சைடில் மோதி லோகேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து,உடனே அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து,இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க