• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

July 11, 2018 தண்டோரா குழு

கோவையில் விமான பயணிகளிடம் கனிவாக நடந்துக்கொள்வது தொடர்பாக காவல்துறையினர், விமான நிலைய அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கால் டேக்சி ஓட்டுனர்களுக்கு அறிவுறைகள் வழங்கப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விமான நிலைய துணை பொதுமேலாளர் ராமகிருஷ்ணன் சிங்,லக்ஷ்மணன் மற்றும் காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.கடந்த சில நாட்களாக விமான பயணிகளிடம் கடுமையாக கால்டேக்சி ஓட்டுனர்கள் நடந்துக்கொள்வதாக எழுந்த புகாரையடுத்து,இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

கால் டேக்சி,ஓலா,ரெட் டேக்சி,ஊபர் போன்ற தனியார் கால் டேக்சி ஓட்டுனர்கள் என சுமார் 100 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.விமான நிலையத்திற்கு பெரும்பாலும் மற்ற மாநிலங்கள்,மற்ற நாட்டவர்கள் மொழி தெரியாமல் சிரமப்படும் நிலையில்,கால் டேக்சி ஓட்டுனர்கள் விமான பயணிகளுக்கு வழிகாட்டியாகவும்,அவர்களின் நண்பனாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறைகள் வழங்கப்பட்டது.

மேலும்,விமான பயணிகளின் உடைமைகள் காணாமல்போகும் பட்சத்தில் உரிய முறையில் பயணிகளை வழி நடத்த வேண்டும்,உடனே விமான நிலைய காவல்துறையினருக்கும்,பீளமேடு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க