• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் – வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்

July 11, 2018 தண்டோரா குழு

கோவையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.நகர்,புறநகர் என பரவலாக மழை பெய்து வருகிறது.கோடை மழையால் ஏற்கனவே மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் 216 மில்லி மீட்டர் மழை பெய்யும் எனவும்,தற்போது வரை 70 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகி உள்ளதாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில்,வரும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.இதனால் விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் கரும்பு மற்றும் வாழைகள் சாயாத வண்ணம் முட்டுக்கொடுப்பது,உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும்,அதிக மேகமூட்டத்தால் மஞ்சள் பயிரில் நுண்ணூட்ட சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால்,இதனை தவிர்க்க போராக்ஸ்,பெராஸ் சல்பேட்,சின்க் சல்பேட்,யூடியா ஆகிய உரங்களை நீரில் கலந்து தெளிக்க வேண்டும் எனவும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க