• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடிநீர் ஆதாரத்தை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

July 10, 2018 தண்டோரா குழு

கோவை நகரின் குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான அனுமதியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறி கோவை மாநகராட்சியை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ் டி பி ஐ கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ் டி பி ஐ கட்சியினர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு கோவை மக்களின் கனவு திட்டமான 24 மணி நேர குடிநீர் சேவைக்கான பராமரிப்பு பணிகளை 26 ஆண்டு காலத்திற்கு ரூ.3ஆயிரத்து 150 கோடி மதிப்பில் அனுமதி வழங்கியது கண்டனத்துக்கு உரியது என்றும், மத்திய அரசின் நிதி உதவி பெற்று மாநில அரசின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி என அரசு நிறுவனத்தின் மூலம் திட்டத்தை செயல்படுத்தாமல் வரலாற்றில் இல்லாதவாறு தனியார் மூலம் குடிநீர் விநியோகத்தை செயல்படுத்துவது ஏற்க முடியாது என்றனர்.

இத்திட்டத்தை செயல்படுத்தும் மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.மேலும், முறையாக பொதுமக்களின் கருத்துக்கேட்பு இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முயல்வதாகவும்,திட்டம் தொடர்பான தகவல்களை முழுமையாக தெளிவாக வெளியிட தயங்குவதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.காவல்துறையினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க