• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரம்பரிய பயிர் வகைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

July 9, 2018 தண்டோரா குழு

பாரம்பரிய பயிர் வகைகளான கம்பு,சோளம்,எள்ளு உள்ளிட்ட பயறு வகைகள் அழிவை நோக்கி செல்வதாகவும் எனவே இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி,பயிர் வகைகளுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் நூதன முறையில் மனு அளித்தனர்.

பாரம்பரிய பயிர்கள் வகைகளான கொண்டை கடலை,எள்ளு,கொள்ளு,மக்காசோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தற்போது பயிரிடுவது குறைந்து வருவதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக தற்போது இந்த பாரம்பரிய பயிர்கள் அழிவை நோக்கி செல்வதாகவும் எனவே இதனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும்,மானாவாரி பயிர்களை பாதுகாக்க அரசு உதவ வேண்டும் எனவும்,இந்த பயிர்களின் அழிவின் காரணமாக தற்போது மக்களிடம் நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும்,எனவே இதன் பயன்கள் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க