• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இனி ஆன்லைனில் வழங்க வேண்டும்- சுகாதாரத்துறை

July 6, 2018 தண்டோரா குழு

சி.ஆர்.எஸ் மென்பொருள் மூலம் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இனி ஆன்லைனில் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.இங்கு ஆன்லைன் வசதி இருந்தாலும், முறையாக பின்பற்றாததால் தாமதம் ஆகிறது.
இந்நிலையில் இனி ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில்,பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு புதிய Common CRS மென்பொருள் மாநிலந் தழுவிய அளவில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலம் வழங்கப்படும் ஆவணங்கள் சட்டபூர்வமாக செல்லும்.அவற்றை அதிகாரப்பூர்வ சான்றுகளாக கொள்ளலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சம்மந்தப்பட்ட பதிவாளர்கள் மூலம் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். புதிய மென்பொருள் தவிர வேறு மென்பொருள் மூலமோ, மேனுவலாகவோ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க