• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது? சிபிஎஸ்இ.,க்கு நீதிபதிகள் கேள்வி

July 2, 2018 தண்டோரா குழு

நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது? என சி.பி.எஸ்.இ.,க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீட் தேர்வில் வினாத்தாள்களை தமிழில் மொழி பெயர்த்ததில் குளறுபடிகள் அதிகம் இருந்ததால் தமிழ் வழி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.ரங்கராஜன் தொடர்ந்த வழக்கு விசாரனை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சி.டி.செல்வம் – ஏ.எம்.பஷீர் அகமது முன்பாக வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள்,நீட் தேர்வு வினாக்கள் ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழியில் மாற்றம் செய்யும் பொழுது எந்த பாடத்தொகுப்பிலிருந்து எடுக்கப்படுகிறது.வினாக்களை ஆங்கில மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க எந்த அகராதி பயன்படுத்தபடுகிறது.இந்த தகவல்கள் தமிழ் வழியில் மாணவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு விளக்க அறிவுரையாக வழங்கப்படுகிறதா?தமிழ் பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆங்கில வார்த்தையை தமிழ் ஆங்கில இலக்கணப்படி எவ்வாறு மொழிபெயர்ப்பது,புரிந்து கொள்வது போன்றவை கற்று கொடுக்க படுகிறதா என நான்கு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் 4 கேள்விகளுக்கு CBSE பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரனையை ஜூலை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்க