• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகப் பள்ளியை பூட்டி போராட்டம்

August 11, 2016 தண்டோரா குழு

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பெத்லகேம் பகுதியில் 396 மாணவ மாணவிகளுடன் செயல்பட்டு வரும் நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் 12 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது அங்கு வெறும் 7 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

அதிலும் இவர்களில் யாராவது விடுப்பில் செல்லும் நேரங்களில் பள்ளி மாணவர்களைக் கவனித்து கொள்ளக்கூட ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளையும், இதர அதிகாரிகளையும் நேரில் சந்தித்து மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அப்பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறிய அப்பகுதி மக்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு செல்ல அனுமதிக்காமல், பள்ளிக்குப் பூட்டு போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்குப் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெற்றோரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து அங்குப் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து தனியார் பள்ளியின் மீதான மோகம் அதிகரிக்க இது போன்ற தவறுகள் தான் காரணமாக அமைவதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க