• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு

July 2, 2018 தண்டோரா குழு

தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழகம்,கர்நாடகம்,கேரளம்,புதுச்சேரி அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.காலை 11 மணியளவில் தொடங்கப்பட்ட மேலாண்மை ஆணைய கூட்டம் சுமாா் 4 மணி நேரம் நீடித்ததது.அதில்
கா்நாடகா அரசு ஜூலை மாதத்தில் 30 டி.எம்.சி. நீரை வழங்கியாக வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2ஆவது கூட்டம் இந்த மாதத்தில் (ஜூலை) நடைபெறும் என்றும்,அந்த கூட்டத்தின் போது ஆகஸ்ட் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீாின் அளவு உறுதி செய்யப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க