• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

June 29, 2018 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை கண்டித்து,அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

பிரெஞ்சு நாட்டினை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டதை கண்டித்து,பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் சூயஸ் நிறுவனத்திற்கு மக்கள் கருத்தை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும்,இது எதிர்காலத்தில் அதிக விலை கொடுத்து குடிநீரை பெற வேண்டிய நிலையினை உருவாக்குமெனவும் அக்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

மேலும்,சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டுமெனவும்,இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 100 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க