• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை மாநகரில் ரூ.85 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

June 28, 2018 தண்டோரா குழு

சென்னை மாநகரில் ரூ.85 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் சிசிடிவி கேமரா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்,சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“ஒவ்வொருவரும் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பது காவல் துறையின் விருப்பம்.சென்னை மாநகரில் ரூ.85 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். கொள்ளையர்களை பிடிக்க சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக இருக்கிறது.வெளிமாநில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை திருடிதான் செயின் பறிப்பில் ஈடுபடுகின்றனர்.ஈரானிய கொள்ளையர்களை ஆந்திரா வரை சென்று பிடிக்க சிசிடிவி கேமரா பெரும் பங்கு வகித்தது.சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக சென்னை எம்.பிக்கள் தங்கள் நிதியில் இருந்து 3 கோடி தருவதாக கூறி உள்ளனர்” எனக் கூறினார்.

மேலும் படிக்க