• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கடையின் பூட்டை உடைத்து 12 லட்சம் பணம் கொள்ளை

June 27, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள மின் சாதனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடையின் பூட்டை உடைத்து 12 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

கோவையை அடுத்த மரக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மின்னணு சாதனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கடையில் பக்கவாட்டில் இருந்த கதவை உடைத்து அங்கு இருந்த 12 லட்ச ரூபாய் பணத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர்.

காலை வழக்கமாக கடையை திறந்த அந்த கடையின் உரிமையாளர் தேவாரம்,கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து காவல் துறையினர்,கைரேகை நிபுணர்களை வரவழைத்து,அங்கு பதிவான கைரேகைகளை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்,கொள்ளையில் ஈடுபட்ட நபர் அந்த கடையில் இருந்த சி சி டி வி காட்சிகளின் பதிவுகளையும் எடுத்து சென்றுள்ளார்.இதனால் கொள்ளையர்களை கண்டு பிடிப்பதில் சிக்கல் நீடிக்கின்ற நிலையில்,அருகே உள்ள கடைகளின் சி சி டி வி கேமாரா பதிவுகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க