• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

June 25, 2018 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கியது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கருப்பு கண்ணாடியுடன் சிகரெட் புகைக்கும் காட்சியில் விஜய் தோன்றினார்.போஸ்டர் வெளியிட்ட அன்றே பாமக-வின் இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.இதனைத்தொடர்ந்து,பாமக தலைவர் ராமதாஸ் படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் சென்னை வேப்பேரி காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் நடிகர் விஜய் மீது திருவேற்காடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் புகார் அளித்தார்.அந்த புகார் மனுவில்,விஜய் சிகரெட் பிடிப்பது போன்று வெளியாகியிருக்கும் சர்கார் பட விளம்பரத்தால் அவரை பின்பற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.அதனால் விஜய் மற்றும் சர்கார் படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து விசாரித்து படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க