• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் வரஇருக்கிறார் – தமிழிசை

June 25, 2018 தண்டோரா குழு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருக்கிறார்.எய்ம்ஸ் மருத்துவமனை,காவிரி ஆணையம் அமைப்பு என பல நலத்திட்டங்களை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்து வருகிறது.மக்கள் பிரச்சனையை விடுத்து,ஆளுநர் விவகாரத்தை மட்டுமே திமுக கையில் எடுத்துள்ளது.சட்டத்தில் என்ன இருக்கிறதோ,அதனையே அறிக்கையாக ஆளுநர் வெளியிட்டுள்ளார்.

எனது சுய உழைப்பினால் தான் அரசியல் கட்சிக்கு தலைவராக வந்துள்ளேன்.பாமக குறித்த கருத்துக்காக என்னை மன்னிப்பு கேட்க சொல்லி அறிக்கை விடுவதா?என கேள்வி எழுப்பினார். மேலும்,இயக்குனர் கவுதமன்,ப்யூஸ்மனுஷ்,நடிகர் மன்சூர் அலிகான்,வளர்மதி போன்றோரெல்லாம் கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது”.எனக் அவர் கூறினார்.

மேலும் படிக்க