• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் வரஇருக்கிறார் – தமிழிசை

June 25, 2018 தண்டோரா குழு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருக்கிறார்.எய்ம்ஸ் மருத்துவமனை,காவிரி ஆணையம் அமைப்பு என பல நலத்திட்டங்களை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்து வருகிறது.மக்கள் பிரச்சனையை விடுத்து,ஆளுநர் விவகாரத்தை மட்டுமே திமுக கையில் எடுத்துள்ளது.சட்டத்தில் என்ன இருக்கிறதோ,அதனையே அறிக்கையாக ஆளுநர் வெளியிட்டுள்ளார்.

எனது சுய உழைப்பினால் தான் அரசியல் கட்சிக்கு தலைவராக வந்துள்ளேன்.பாமக குறித்த கருத்துக்காக என்னை மன்னிப்பு கேட்க சொல்லி அறிக்கை விடுவதா?என கேள்வி எழுப்பினார். மேலும்,இயக்குனர் கவுதமன்,ப்யூஸ்மனுஷ்,நடிகர் மன்சூர் அலிகான்,வளர்மதி போன்றோரெல்லாம் கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது”.எனக் அவர் கூறினார்.

மேலும் படிக்க